
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்த எங்கள் நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக பொதுக்குழுவில் எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த்-துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுகவுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.