
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார். ‘மதயானைக்கூட்டம்’, ‘இராவணக்கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் மறைவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். 2013-ம் ஆண்டு ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, சாந்தனுவை கதாநாயகனாக வைத்து 2023-ம் ஆண்டு ‘இராவணக்கோட்டம்’ படத்தை இயக்கியிருந்தார் விக்ரம்.
இதைத் தாண்டி, வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு, சசிகுமாருடன் ‘கொடிவீரன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் சுகுமாரன்.
விக்ரம் சுகுமாரன் உயிரிழந்த தகவலைப் பகிர்ந்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷாந்தனு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “உங்களிடமிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன்.
#Rip dearest brother @VikramSugumara3
I’ve learnt so much from you & will always cherish every moment
Gone too soon
You will be missed #RIPVikramSugumaran pic.twitter.com/U78l3olCWI— Shanthnu (@imKBRshanthnu) June 1, 2025
அந்தத் தருணங்களெல்லாம் என்றும் என் நினைவில் இருக்கும். சீக்கிரமாக எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள்,” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.