
புதுடெல்லி: டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் மழை காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சமீபத்திய தகவலின்படி, மாலை 5 முதல் 5.30 மணி வரை டெல்லிக்கு வந்த நான்கு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் இருந்து வந்த இரண்டு விமானங்கள், சண்டிகர் மற்றும் அமிர்தசரஸில் இருந்து வந்த தலா ஒரு விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனிடையே டெல்லி விமான நிலையம் அதன் எக்ஸ் பதிவில், சமீபத்திய விமான சேவைகளின் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுனங்களைத் தொடர்பு கொள்ளும்படி பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.