
மேட்டூர்: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், 12 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை மற்றும், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது.