• June 1, 2025
  • NewsEditor
  • 0

நிகழ்கால கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மூன்று வகையான ஃபார்மெட்டிலும் நம்பர் ஒன் பவுலர் யாரென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஜஸ்பிரித் பும்ராவைக் கூறலாம்.

நேற்று முன்தினம் (மே 30) குஜராத்துக்கெதிரான போட்டியில் வாஷிங்க்டன் சுந்தருக்கு அன்பிளேயபிள் பந்துவீசி போல்டாக்கி ஆட்டத்தையே மும்பை பக்கம் மாற்றி விட்டார்.

பும்ரா

அடுத்து, குவாலிஃபயர் 2-ல் பஞ்சாப்பை வீழ்த்தி மும்பையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் பும்ரா, தனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம்தான் முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.

Beyond23 கிரிக்கெட் பாட்காஸ்ட்டில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கிடம் பேசிய பும்ரா, “எனக்கு என் கரியரை விட என் குடும்பம்தான் முக்கியம்.

ஏனெனில், குடும்பம்தான் நிலையானது என உங்களுக்கே தெரியும்.

குடும்பத்துடன் பும்ரா
குடும்பத்துடன் பும்ரா

குடும்பமும், எனது கிரிக்கெட்டும்தான் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் இரண்டு விஷயங்கள். அதிலும், குடும்பம்தான் எனக்கு ஃபர்ஸ்ட்.

என் குடும்பத்தினரைப் பொறுத்தவரை நான் கிரிக்கெட் வீரர் அல்ல ஒரு மனிதன். ஒரு இளம் தந்தையாக என் மகனைப் பார்க்கிறேன். அவர் பந்தை எடுத்து இப்போதே விளையாடத் தொடங்கிவிட்டார். இப்போதைக்கு அது நல்லதல்ல” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *