
18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் 2வது தகுதிச்சுற்றில் மும்பைக்கு எதிராக ஆடவிருக்கிறது. நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் மும்பை அணி குறித்து அஷ்வின் தனது யூடியூப் சேனலில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
“2018ம் ஆண்டு நான் பஞ்சாப் கேப்டனாக இருந்தபோது மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில், மும்பை அணி முதல் 13 ஓவர்களில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தது.

திடீரென கரண்ட் கட் ஆகி, மைதான விளக்குகள் அணைந்தது. 20 நிமிடத்திற்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கி, பொல்லார்ட் மிகச்சிறப்பாக விளையாடியதால் அந்த போட்டியில் மும்பை அணி 180 ரன்களுக்கு மேல் எடுத்தது. சில அணிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
ஆனால், மும்பைக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் அடிக்கிறது. மும்பை அணிக்கு எப்படி இவ்வளவு லக்(Luck) கிடைக்கிறது என நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…