
சென்னை: திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. மதுரையில் 48 ஆண்டுக்கு முன்பு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.