
வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக அசைவ உணவை விருப்பத் தேர்வாக செய்யமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை, மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய நகரங்க ளுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகளுக்கு பயணத்தின்போது, உணவு, தேநீர், காபி, பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகிறது. காலை, மதியம் பயணத்தை பொருத்து, பயணிகளின் விருப்பத்தை கேட்டறிந்து உணவு வழங்கப்படுகிறது.