
சென்னை: ஒரு மாத கோடை விடு முறைக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன் றம் தனது அன்றாடப் பணிகளை நாளை முதல் தொடங்குகிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஹேமந்த சந்தன் கவுடர் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.
சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்ற மதுரை கிளைக்கு கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதியான இன்று வரை கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 2) முதல் உயர்நீதிமன்றம் தனது அன்றாடப் பணிகளை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க பிரத்யேக அமர்வுகள் அமைக் கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.