• June 1, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரையில் முதல்வர் வரும் பாதையில் அமைந்திருந்த ‘பந்தல் குடி' கழிவுநீர் கால்வாயை சுற்றி லும் வண்ண திரைச்சீலைகளை கட்டி மறைத்திருந்தனர்.

மதுரை மாநகராட்சியில் உள்ள மழைநீர் கால்வாய்களில் 'பந்தல்குடி' கால்வாய் முக்கியமானது. கடந்த காலத்தில் செல்லூர் கண்மாயின் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக வைகை ஆற்றில் சென்று கலந்தது. தற்போது செல்லூர் பகுதியின் ஒட்டுமொத்த கழிவுநீரும் இக்கால்வாய் வழியாகச் சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இப்பகுதியை கடந்து செல்லும் மக்கள், கடும் துர்நாற்றத்தின் மத்தியில் சென்று வந்தனர். இக்கால்வாய் வழியாகத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *