• June 1, 2025
  • NewsEditor
  • 0

மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு மின்னணு பச்சை குத்தலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை இ-டாட்டூ என்கின்றனர்.

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நேர்மறையான விளைவுகளும், எதிர்மறையான விளைவுகளும் இதில் அடங்கும். தங்களின் வேலை, பொருளாதாரத் தட்டுப்பாடு, குடும்பம் என பல்வேறு காரணங்களை காட்டி மன அழுத்தம் கொள்கின்றனர்.

இந்த மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு புரட்சிகரமான கருவியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதாவது மூளை அலைகளை டிகோட் செய்வது மூலம் மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு இ – டாட்டூவை உருவாக்கியுள்ளனர்.

Cell Press journal Device, இணையதளத்தில் வெளியிட்ட ஆய்வின்படி, மன அழுத்தத்தை அளவிட மூளை அலைகளை டிகோட் செய்யும் ஒரு வயர்லெஸ் மின்- பச்சை குத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வயர்லெஸ் இ-டாட்டூவில் இலகுரக பேட்டரி பேக் மற்றும் காகிதம் போன்ற மெல்லிய ஸ்டிக்கர் சென்சார்கள் உள்ளன. இந்த சென்சார்கள் அலை அலையான சுருள்களை கொண்டுள்ளன.

எலக்ட்ரோஎன்செபலோகிராபி (EEG) மற்றும் எலக்ட்ரோகுலோகிராபி (EOG) எனப்படும் செயல்முறைகளில் மூளையின் மின் செயல்பாடு மற்றும் கண் இயக்கத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த இ-டாட்டூ செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) என்பது மூளையின் மின் செயல்பாட்டை பதிவு செய்யும் ஒரு சோதனையாகும். இது மூளையில் இருந்து இயற்கையாக நிகழும் மின் செயல்பாட்டை அளவிடுகிறது. குறிப்பாக மூளை பாதிப்பு அல்லது வலிப்பு போன்ற நிலைகளைக் கண்டறிய EEG சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. எலக்ட்ரோகுலோகிராபி (EOG) என்பது கண் இயக்கத்தை பதிவு செய்ய பயன்படும் ஒரு மின் இயற்பியல் சோதனை ஆகும்

இதன் மூலம் மன அழுத்தத்தையும் கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சாதனம் மன சோர்வை முன்கூட்டியே கணிக்க முடியும் என்ற முடிவுகளை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *