• June 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த சிலையை அமைக்​கு​மாறு கோரிக்கை வைத்த பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம் மற்​றும் சென்​னை​யின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்​விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்​ளன.

இதன் சிறப்பு விருந்​தினர்​களாக தமிழர்​களான வாராணசி மண்டல ஆணை​யர் எஸ்​.​ராஜலிங்​கம், பிர​யாக்​ராஜின் டிஐஜி டாக்​டர்​.என்​.​கொளஞ்சி ஆகியோர் கலந்து கொள்​கின்​றனர். பிர​யாக்​ராஜ் நகர மேயர் கணேஷ் சந்​திர கேசர்​வாணி, அலகா​பாத் அருங்​காட்​சியக இயக்​குநர் முனை​வர்​.​ராஜேஷ் பிர​சாத் ஆகியோர் கலந்து கொள்​கின்​றனர். பாஷா சங்​கத்​தின் சார்​பில் அதன் முன்​னாள் நிர்​வாகி​களான சி.எம்​.​பார்​கவா மற்​றும் ஆனந்த் கில்​டி​யால் பங்கு பெறுகின்​றனர். இந்து தமிழ் திசை சார்​பில் அதன் டெல்லி மூத்த பத்​திரி​கை​யாள​ரான ஆர்​.ஷபி​முன்னா உரை​யாற்​றுகிறார். இவ்​விழா​வின் முக்​கிய ஏற்​பாட்​டாள​ராக பாஷா சங்​கத்​தின் முன்​னாள் பொதுச்​செய​லா​ளர் முனை​வர்​.எம்​.கோ​விந்​த​ராஜன் உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *