
தமிழகத்தில் அனைத்து கழிவுப் பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களைத் தேர்வு செய்து, பட்டியலிட்டு அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய ‘தூய்மை இயக்கம்’ என்ற ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுகிறது. இநத அமைப்பை செயல்படுத்த தூய்மை தமிழகம் நிறுவனம் (சிடிசிஎல்) என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது