
கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் விற்கப்பட்ட தனி மனைகளை எந்த காலக்கெடுவும் இன்றி இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், கடந்த 2016 அக்.20-ம் தேதி மற்றும் அதற்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்த பட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப் பத்திரம் கடந்த 2016 அக்.20 அல்லது அதற்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவையும் வரன்முறைப்படுத்த அந்த விதிகள் வெளியிடப்பட்ட 6 மாதங்களுக்குள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வரையறையானது பல்வேறு அரசாணைகள் மூலம் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.