
பாமகவின் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, ‘தமிழகத்தை பாமக ஆளும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-வது நாளாக பாமக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை, உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.