
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக மையம் செயல்பட்டு வருகிறது. விண்ணில் விண்கலங்களை செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இஞ்ஜின்கள், பி.எஸ்.4 இன்ஜின்கள் ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.