• May 31, 2025
  • NewsEditor
  • 0

சோழிங்கநல்லூர்: “பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம், கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே. அதற்கான நேரம் வந்திருக்கிறது. அது நிச்சயமாக நடக்கும். அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மனு வாங்குகின்ற கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், இரண்டாவது நாளாக பாமக மாவட்ட நிர்வாகிகள் உடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்றும் (மே 31) ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்கவில்லை. அதேபோல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *