
திருநெல்வேலி: “சிறப்புக் கட்டணங்கள் என்ற பெயரில், பொருளாதார தீண்டாமையை இந்து கோயில்களில் திணிப்பது சாபக்கேடு. பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் இந்துசமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோயிலை காட்சி பொருளாக்கி பக்தர்களிடம் சுரண்டி, கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடலின் வெற்று கோஷமாக இருக்கிறது.