
அலகாபாத்: “நம் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதற்கான பெருமை அரசியலமைப்புக்கு மட்டுமே உரியது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அறைகள் மற்றும் பல நிலை வாகன நிறுத்துமிட திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய தலைமை நீதிபதி கவாய், "அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் இறுதி வரைவு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, சிலர் அரசியலமைப்பு மிகவும் கூட்டாட்சி சார்ந்தது என்று கூறினர்; சிலர் அது ஒற்றையாட்சி சார்ந்தது என்று கூறினர். பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் அரசியலமைப்பு முற்றிலும் கூட்டாட்சியானது அல்லது முற்றிலும் ஒற்றையாட்சியானது அல்ல என்று பதிலளித்தார்.