
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் ரூ.30 கோடியை கடந்து தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்துள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த தமிழகம் முழுக்க பயணம் செய்தார் சூரி.