
துஷான்பே: நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற பனிப்பாறைகள் குறித்த முதல் ஐ.நா.மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பயங்கரவாதத்தின் மூலம் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.