
போபால்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் "துணிச்சலான மகள்கள்" தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று இந்தியாவின் வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தை பிளவுபடுத்த முயன்றனர்.