• May 31, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “ஏப்ரல் 22 நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவை சேதப்படுத்துவதையும், மத பதற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட தீய வடிவமைப்பாக இருந்தது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முன்மாதிரியான பதில் தேவைப்பட்டது. இது பாகிஸ்தானில் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே உள்ளிட்ட இடங்களில் உள்ள பயங்கரவாத கட்டளை மையங்களை அழிப்பதன் மூலம் வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *