
வாசிப்பது எப்படி ஒரு சுக அனுபவமோ அப்படிதான் கேட்பதும். காணொளியாகப் பார்ப்பதை விடக் கேட்பது நல்லது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். காணொளி என்பது ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று. அங்கு உங்களால் ஒரு விஷயத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏற்கெனவே அங்கு ஒரு விஷயத்தை Visualise செய்து இருக்கிறார்கள். அது உங்கள் கற்பனைவளத்திற்கு ஒரு இடையூறாக உள்ளது. அந்தப் பிரச்னை ஆடியோ புத்தகத்தில் இல்லை.
சரி. Vikatan Playல் மே மாதம் அதிகம் கேட்கப்பட்ட ஐந்து புத்தகங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
இறையுதிர் காடு – இன்று
இந்திரா செளந்தர்ராஜனால் எழுதப்பட்டு ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற மர்ம நாவல் இறையுதிர் காடு.
அதில் ‘அன்று’ பகுதியில் சித்தர்கள் காலகட்டமும், ‘இன்று’ பகுதியில் தற்போதைய காலகட்டமும் வரும்.
ஒரு மர்ம பெட்டி, ரத்தம் பார்க்கும் கத்தி, துரத்தும் நாகம், அமானுஷ்ய சித்தர்கள் எனப் பரபரப்பாகச் செல்லும் இன்று பகுதியை மட்டும் தனி audio bookஆக வெளியிட வேண்டும் என வாசகர்கள் கேட்டு இருந்தார்கள். அதனைத் தனியாகப் பிரசுரம் செய்து இருந்தோம்.
இந்த மாதம் வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் முதல் இடம் பிடிப்பது இறையுதிர் காடுதான்.
இறையுதிர் காடு – இன்று நாவலை கேட்க
கோட்டைப்புரத்து அரண்மனை
மே மாதம் வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ புத்தகத்தில் இரண்டாம் இடம் பிடிப்பது கோட்டைப்புரத்து அரண்மனை.
டிசம்பர் மாதம் வெளியான கோட்டைப்புரத்து வீடு ஆடியோ புத்தகம் விகடன் ப்ளேயின் சூப்பர் டூப்பர் புத்தகங்களில் ஒன்று. அது போல மற்றுமொரு ஆடியோ புத்தகத்தை வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விகடன் ப்ளே குழு வெளியிட்டதுதான் கோட்டைப்புரத்து அரண்மனை. சந்திரமுகி பட பாணியில் பரபரப்பாக நகரும் இந்த audio bookஐ கேட்கக் கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
கோட்டைப்புரத்து அரண்மனை நாவலை கேட்க
ரோலக்ஸ் வாட்ச்:
எழுத்தாளர் சரவணன் சந்திரனின் அதிரி புதிரி நாவல் தான் ரோலக்ஸ் வாட்ச். வாழ்க்கையின் மேன்மை, கீழ்மைகள் குறித்த கேள்விதான் இந்நாவல்.
நேர்க்கோட்டில் போகிற ஒரு வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் நிறைந்த தேசத்தில் அவர்களது தலைவிதியைத் தீர்மானிப்பவர்களுக்கு நெருக்கமான இருட்டு உலகத்தைப் பதிவு செய்யும் நாவல் இது.
தர்மம் எது? தர்மனிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி வேறொரு உலகத்தின் பின்னால் நின்று மறுபடியும் வலுவாகக் கேட்கப்படுகிறது. தர்மத்தின் மீது அக்கறையே இல்லாத நட்சத்திர வாழ்விற்குப் பின்னால் இருக்கிற சல்லித்தனங்களைக் காட்சிப்படுத்துவதன் வழியாக ஒரு புதிய திறப்பை வாசகர்களுக்கு அளிக்கிறது சரவணன் சந்திரனின் இந்நாவல்.
மே மாதம் வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் மூன்றாம் இடம் பிடிக்கிறது ரோலக்ஸ் வாட்ச்.
இந்நாவல் தொடர்பாக அண்மையில் சரவணன் சந்திரனுடன் உரையாடினோம். அந்த உரையாடலை கேட்க:
மகாபாரதம் அறத்தின் குரல்
எக்காலத்துக்குமான காவியம் மகாபாரதம். மாபெரும் அரசியல் நுட்பங்களும் கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரை நடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறார் நா. பார்த்தசாரதி. இந்த நாவலை Audio வடிவத்தில் விகடன் ப்ளேயில் மே மாதம் கொண்டு வந்தோம்.
மே மாதம் பிரசுரமான நாவல்களில் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் நான்காம் இடத்தில் உள்ளது மகாபாரதம் அறத்தின் குரல்.
மகாபாரதம் அறத்தின் குரலை கேட்க
செரிமானம் அறிவோம்:
மனிதன் உணவு சாப்பிடத் தொடங்கியபோதே செரிமானத்துக்கான உறுப்புகள் இயங்க ஆரம்பித்தன. வாய், பற்கள், உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், கணையம் போன்ற பல உறுப்புகள் செரிமானத்துக்கானவை. செரிமானம் குறித்து நாம் அறிய வேண்டாமா? மருத்துவர் பாசுமணியால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை Vikatan Play குழு Audio வடிவத்தில் கொண்டுவந்துள்ளது.
மே மாதம் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் ஐந்தாம் இடத்தில் உள்ளது செரிமானம் அறிவோம்.