
திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அடுத்த கோபால்பட்டி வாரச்சந்தையில் இன்று (மே 31) ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களில் அசைவ விருந்து அளிப்பதற்காகவும், ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே 31) வாரச்சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை 2 மடங்கு கூடுதலாக விற்பனையாது.