
புதுடெல்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு அளித்த விளக்கத்தை ஏற்று அந்நாடு தனது முடிவை மாற்றியுள்ளது.
பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை தாக்கியது இந்திய ராணுவம்.