
சென்னை: தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்களும் பரவலாக நடக்கின்றன.