
தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் மே 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் தி.மு.க-வின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அதேபோல மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிந்தார்.
நேற்று(மே 30) ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
இந்நிலையில் இன்று (மே 31) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஸ்டாலின், “நம் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். மய்யத்தின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாதத் தமிழர்களுக்கான குரலாக அது இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், “ நானே புதியக் கட்சி தான். புதிய கட்சிகளைப் பற்றி விமர்சிக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…