
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.
அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் சில தயாரிப்பாளர்கள், அதைப் படமாக்கக் கேட்டுக்கொண்டனர். இரண்டு நாடகங்களையும் பார்த்தார், ஏ.எஸ்.ஏ.சாமி. இரண்டும் தங்கை பற்றிய கதை என்பதால் இரண்டையும் ஒன்றாக்கி படமாக்கலாம் என்றார். அதற்கு நடராஜன் ஒப்புக்கொள்ளவில்லை.