• May 31, 2025
  • NewsEditor
  • 0

மாமல்லபுரம்: உறு​தி​யாக இருந்​தால் நிச்​ச​யம் சாதிக்க முடி​யும் என்று பள்ளி மாணவர்​களுக்கு தமிழக வெற்​றிக் கழக தலை​வர் விஜய் அறி​வுரை வழங்​கி​யுள்​ளார். தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் கல்வி விருது வழங்​கும் விழா, மாமல்​லபுரம் அருகே தனி​யார் சொகுசு விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் விஜய் பேசி​ய​தாவது: கல்​வி​யில் சாதிக்க முடி​யாதது எது​வும் இல்​லை. நீட் தேர்வு மட்​டும் உலகம் அல்ல. நீட்டை தாண்​டிய இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில், நீங்​கள் சாதிக்க வேண்​டியது நிறைய உள்​ளது. அதனால், உங்​களின் மனநிலையை மிக​வும் தைரிய​மாக வைத்​துக் கொள்ள வேண்​டும். ஜனநாயகம் என்ற ஒன்று இருந்​த​தால்​தான், இந்த உலகம் சுதந்​திர​மாக இருக்க முடி​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *