
ஹைதராபாத்: உலகிலேயே அதிக நெல் உற்பத்தி செய்யும் 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. நெல்உற்பத்தியில் உரத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். உரங்கள் நெல்லுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உறை கருகல் நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து தடுக்காவிட்டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்கிறது விவசாயத் துறை. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், பிஏஎஸ்எப் நிறுவனம் தனது மும்பை, புனே ஆய்வகங்களில் தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில் புதிய ரசாயன திரவங்களை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து, பிஏஎஸ்எப் தெற்காசிய நிர்வாக இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் மைக் ஹெய்ன்ஸ், மூத்த துணைத் தலைவர்கள் மார்கோ க்ரோஸ்டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்எப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் கெர்டிங், பிஏஎஸ்எப் இந்தியாவுக்கான வேளாண் தீர்வுகள் பிரிவின் வணிக இயக்குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்சியோ’ மற்றும் ‘மிபிலியா’ என்ற புதிய ரசாயன திரவங்களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துறையுடன் இணைந்து செயல்படும் எங்களது பிஏஎஸ்எப் என்ற பிரபல ரசாயன உற்பத்தி நிறுவனம், ‘வேலெக்சியோ’ மற்றும் ‘மிபிலியா’ என்ற இரண்டு நவீன ரசாயன திரவங்களை வெளியிட்டுள்ளது.