• May 31, 2025
  • NewsEditor
  • 0

ஹைத​ரா​பாத்: உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும். உரங்​கள் நெல்​லுக்கு தேவையான ஊட்​டச்சத்​துக்​களை வழங்​கு​கின்​றன. உறை கரு​கல் நோயை ஆரம்​பத்​திலேயே கண்டு பிடித்து தடுக்​கா​விட்​டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்​கப்​படும் என்​கிறது விவ​சா​யத் துறை. இதற்கு தீர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், பிஏஎஸ்​எப் நிறு​வனம் தனது மும்​பை, புனே ஆய்​வகங்​களில் தொடர்ச்​சி​யாக நடத்​திய ஆய்​வில் புதிய ரசாயன திர​வங்​களை கண்​டு​பிடித்​துள்​ளது.

இதுகுறித்​து, பிஏஎஸ்​எப் தெற்​காசிய நிர்​வாக இயக்​குநர்​கள் குழு​வின் உறுப்​பினர் மைக் ஹெய்ன்​ஸ், மூத்த துணைத் தலை​வர்​கள் மார்கோ க்ரோஸ்​டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்​எப் இந்​தியா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அலெக்​சாண்​டர் கெர்​டிங், பிஏஎஸ்​எப் இந்​தி​யா​வுக்​கான வேளாண் தீர்​வு​கள் பிரி​வின் வணிக இயக்​குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற புதிய ரசாயன திர​வங்​களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளி​யிட்ட​னர். பின்னர் அவர்கள் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 130 ஆண்​டு​களுக்​கும் மேலாக விவ​சா​யத்​துறை​யுடன் இணைந்து செயல்​படும் எங்​களது பிஏஎஸ்​எப் என்ற பிரபல ரசாயன உற்​பத்தி நிறு​வனம், ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற இரண்டு நவீன ரசாயன திர​வங்​களை வெளி​யிட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *