• May 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் பழநி, ராமேசுவரம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது, "திருச்செங்கோடு, உடுமலை, பழநி ஆகிய 3 தேர்வுநிலை நகராட்சிகள் சிறப்புநிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், நத்திவரம் – கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய 3 முதல்நிலை நகராட்சிகள், தேர்வுநிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய 2-ம் நிலை நகராட்சிகள், முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்" என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (2023) விதிகளின்படி, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ரூ.6 கோடிக்கு மிகாமல் ஆண்டு வருவாய் கொண்ட நகராட்சிகள் 2-ம் நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வரை ஆண்டு வருமானம் கொண்ட நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும், ரூ.9 கோடி முதல் ரூ.15 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நகராட்சிகள், தேர்வுநிலை நகராட்சிகளாகவும், ரூ.15 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்ட நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *