
சென்னை: எல்சா-3 கப்பல் விபத்தால் தமிழக கடலோரப் பகுதிகளில் எவ்வித ஆபத்தான பொருட்களும் ஒதுங்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: கேரளா கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் கடந்த மே 24-ம் தேதி விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் போன்ற ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தன.