
மதுரை: நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பை முழுமையாகத் திரும்பபெற வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் இன்று (மே 30) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் சார்ந்து ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. இது மிக மோசமான நடைமுறை. பிரிவு 11 -ல் நகைக் கடன் பெறுவோர் நகை வைத்திருப்பதற்கான ஆவணங்களை செலுத்த வேண்டும் என்பதும் மோசமான ஓர் அறிவிப்பு.