• May 30, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: ‘சசி தரூர் எம்.பி-க்கு காங்கிரஸ் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. குறித்த கோரிக்கையை காங்கிரஸ் வைக்கவில்லை. அதனால், எங்களுக்கு ஏமாற்றமில்லை. திமுக, காங்கிரஸ் இடையே நல்ல உறவு உள்ளது. சசி தரூர் சிறந்த சிந்தனையாளர், 4 முறை எம்.பி-யாக தேர்வானவர். அவருக்கு கட்சி உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் தான் கூட்டுறவு வங்கிகள் வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *