
சென்னை: நாளை (மே 31) ஓய்வு பெறும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கோரி போக்குவரத்து ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனஜா முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவள்ளுவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடத்துநராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2018-ம் ஆண்டு டிக்கெட் பரிசோதகர் பதவி உயர்வுக்கான பட்டியலில் என்னை விட ஜூனியரின் பெயர் எனக்கு முன்பாக இருந்தது. இதுதொடர்பாக புகார் அளித்ததால் பட்டியல் திருத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகும் எனக்கு டிக்கெட் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.