• May 30, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்தில், தங்க நகைக் கடனுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் வரைவுகளின் சில தளர்வுகளைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடனுக்கான வரைவுகளை வெளியிட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த விதிமுறைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின் படி, நிதி சேவைகள் துறை ஆய்வு செய்தது.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI

இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி வரைவுகளில் கூறப்பட்டுள்ள மாற்றங்களால் சிறு தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நகைக் கடன் விதிமுறைகள் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தான் அமலுக்கு வர வேண்டும். அப்போது தான் இதை அமல்படுத்தப் போதுமான கால அவகாசம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, ரூ.2 லட்சத்திற்குக் கீழ் தங்க நகைக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த விதிமுறைகள் விதிக்கப்படக்கூடாது. அப்போது தான் அவர்களால் எளிதாகவும், விரைவாகவும் தங்க நகைக் கடன் வாங்க முடியும் என்று நிதி சேவைகள் துறை கூறியுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி மக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறது.

நிதி சேவைத் துறையின் அனைத்து பரிந்துரைகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *