
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 15-ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம், சுயேட்சை எம்எல்ஏவும், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனருமான நேரு (எ) குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் முதல்வரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. தற்போது கோடைக்காலம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. அதன் எதிரொலியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதனால் மேகமூட்டம் ஏற்பட்டு கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.