
தூத்துக்குடி: தமிழகத்தில் 6,500 அங்கன்வாடி மையங்கள் ‘ஸ்மார்ட் அங்கன்வாடி’ மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவாக 100 மில்லி பால், 2 முட்டை, ஒரு கப் சுண்டல், 3 பிஸ்கட் ஆகியவை வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவு வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று (மே 30) நடைபெற்றது. மருத்துவமனை டீன் கு.சிவக்குமார் தலைமை வகித்தார்.