• May 30, 2025
  • NewsEditor
  • 0

சோழிங்கநல்லூர்: “நான், பொருளாளர், பொதுச் செயலாளர் என அனைவரும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். எனவே, பொதுக்குழு நினைத்தால்தான் எங்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். வேறு யாராலும் அவ்வாறு செய்ய முடியாது. கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் என்னுடைய கடிதம்தான் செல்லும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், “மன உளைச்சலில் இருந்தேன்… நேற்றுதான் விடுதலை கிடைத்தது” என்று அவர் கூறினார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாமக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 30) தொடங்கிவைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *