• May 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “நகைக் கடன் மீதான ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளை 2025-ம் ஆண்டு வரை செயல்படுத்தக் கூடாது; ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரைகள் போதுமானவை அல்ல” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ம் ஆண்டு வரை செயல்படுத்தக் கூடாது. ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த பரிந்துரைகள். இவை போதுமானவை அல்ல.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *