
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கியதில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் பள்ளி கழிப்பறைக்குச் சென்றபோது கதவு மூடப்படாமல் இருந்ததை பார்த்த 6-ம் வகுப்பு மாணவிகள், கழிப்பறைக் கதவை மூடிஉள்ளனர்.
சிறிது நேரம் கழித்து கதவை திறந்து விட்ட மாணவிகளை ஆசிரியை சாந்தி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சக மாணவிகள் முன்பாக அடித்துள்ளார். இதில் மாணவிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.