
சென்னை: "தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நமது இலக்கு. எனவே நமக்குள் வேற்றுமைகள் எதுவும் இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். பாமகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் சம்மந்தமாக 5 மாவட்டத்தின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இங்கே கூடியுள்ளோம். இது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு. நீங்கள் எல்லோரும் வேகமாக வேலை செய்து இப்பணியை முடிக்க வேண்டும்.