• May 30, 2025
  • NewsEditor
  • 0

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், “முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம்.

கமல்ஹாசன்- உதயநிதி

முன் அனுபவம் உள்ளவர்கள் தங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்றிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும்போது குடும்ப அரசியல் குழித்தோண்டி தமிழகத்தைப் புதைக்கிறார்கள் என்று சொன்னீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ” நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கர்நாடக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ” இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *