• May 30, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெற்றிருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.

நிஜாம்பேட்டையில் நடந்த காங்கிரஸின் 'ஜெய் ஹிந்த் யாத்திரை'யில் பங்கேற்று உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, "போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டவில்லை. பிரதமர் மோடி 1000 ரூபாய் செல்லாத நோட்டு போன்றவர். எனவே இன்று, இந்த நாட்டிற்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை. ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை உத்வேகமாக எடுத்துக் கொண்டு, காளியின் வழியில் நடந்து, பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாக ஆக்கி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் கைப்பற்றியிருப்பார்" என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *