• May 30, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: "வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34- வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்பாக பணியாற்றினார். நதிநீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ. மே 1-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை, நெய்வேலி என்.எல்.சி., தனியார்மயமாக்கலை தடுத்தது, ரயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *