• May 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, அதே அணியைச் சேர்ந்த தமிழக வீரரான அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் சென்னை மக்கள் குறித்து ஜடேஜா பேசியிருக்கிறார்.

ஜடேஜா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் தொடங்கிவிட்டன.

இந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாகத் தடுமாற்றமாகச் செயல்பட்டு, வரலாற்றில் முதன்முறையாகப் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து தொடரைவிட்டு வெளியேறி இருக்கிறது.

இந்நிலையில், அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சென்னை மக்கள் குறித்துப் பேசிய ஜடேஜா, “சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என இங்கு வந்தபோது உணர்ந்து கொண்டேன். இவர்களோடு ஒப்பிடுகையில் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவே.

சிஎஸ்கே ரசிகர்கள்
சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு குறையாது. ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை” என்று சென்னை மக்களைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *