
‘விஜய் கல்வி விருது வழங்கும் விழா!’
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் விழாவை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் நடக்கும் விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வில் மாணவர்களின் மத்தியில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசியிருந்தார்.
‘நீட் மட்டும்தான் உலகமா!’
விஜய் பேசியதாவது, ‘இளம் தலைவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க எல்லாரையும் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி. உங்கள் எல்லாருக்கும் முதலில் வாழ்த்துகள். படிப்புல சாதிக்கணும்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.
ஜனநாயகவாதியா இருங்க. ஜனநாயகவாதியா இருந்தாதான் சுதந்திரமா இருக்க முடியும். உங்க வீட்ல இருக்க எல்லார்க்கிட்டயும் அவங்க ஜனநாயகக் கடமையை சரியா செய்ய சொல்லுங்க. அது ரொம்ப எளிமையான விஷயம்தான். இதுவரைக்கும் ஊழல் பண்ணாத நல்லவங்கள நம்பிக்கையானவங்களை தேர்வு செய்ய சொல்லுங்க.
வண்டி வண்டியா பணத்தை..!
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இதே நிகழ்வுல, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, அந்த கலாசாரத்தை ஊக்குவிக்காதீங்கன்னு சொல்லிருந்தேன். அதை அப்படியே பின்பற்றுங்க. ஆனா, நீங்களே பாருங்க அடுத்த வருசம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் அது. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்.
உங்க குழந்தைகள் மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா விதைக்கிறாங்க? இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா?

சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வச்சிருங்க!
போதைப் பொருள்களை ஒதுக்கி வைக்கிற மாதிரி சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வச்சிருங்க. அதுதான் எல்லாருக்குமே நல்லது. தந்தை பெரியார் அவர்களுக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கிறாங்க. ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்விலேயே சாதி ரீதியா ஒரு கேள்வியை கேட்டு வச்சிருக்காங்க. அதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த உலகத்துல எது சரி எது தவறுன்னு அலசி ஆரய்ந்தாலே நல்ல வாழலாம். தொழில்நுட்ப ரீதியாவும் அறிவியல் ரீதியாவுமே யோசிங்க. AI உலகத்தை எதிர்கொள்ள அதுதான் ஒரே வழி.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY