
சென்னை: நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டு்ப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்துக்கான பூர்வாங்கப் பணிகளை நேற்று காலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் 4 தளங்களுடன் 19,464 சதுர அடி பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.