• May 30, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை மாநக​ராட்சி மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன்​வசந்த், திமுக​வில் இருந்து தற்​காலிக​மாக நீக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக திமுக பொதுச்செய​லா​ளர் துரை​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மதுரை மேயர் இந்​தி​ராணி கணவர் பொன்​வசந்த், கட்​சிக் கட்​டுப்​பாட்டை மீறி​யும், கட்​சிக்கு அவப்​பெயர் ஏற்​படுத்​தும் வகை​யிலும் செயல்​பட்டு வந்​த​தால், அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்​தும் தற்​காலிக​மாக நீக்கி வைக்​கப்​படு​கிறார்” என்று அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து திமுக​வினர் கூறும்​போது, “பொன்​வசந்​தின் கட்​சிப் பணி​யால் ஈர்க்​கப்​பட்ட அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பரிந்துரையில் இந்​தி​ராணி மேய​ரா​னார். தற்​போது மாநக​ராட்சி நிர்​வாகத்​தில் தலை​யீடு, கட்சி செயல்​பாடு​களில் குளறு​படி என பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் காரண​மாக பொன்​வசந்த் திமுக​வில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார். இதனால், அவரது மனைவி இந்​தி​ராணி, மேயர் பதவி​யில் வழக்​கம்​போல செயல்பட முடி​யாத சூழல் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *