
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, “பொன்வசந்தின் கட்சிப் பணியால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிந்துரையில் இந்திராணி மேயரானார். தற்போது மாநகராட்சி நிர்வாகத்தில் தலையீடு, கட்சி செயல்பாடுகளில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பொன்வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது மனைவி இந்திராணி, மேயர் பதவியில் வழக்கம்போல செயல்பட முடியாத சூழல் உள்ளது.